அப்போவே சேர நினைத்த சிம்பு – தனுஷ்: இதுனாலதான் நடக்காம போச்சு..!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. குறிப்பாக
தனுஷ்

வெற்றிமாறன்
கூட்டணியில் வெளியாகும் படங்களுக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் அதிரிபுதிரி ஹிட்டடித்த படம் ‘
வடசென்னை
‘.

வடசென்னை மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான இந்தப்படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்களலே நடித்திருந்தனர். இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் இறங்க உள்ளார் வெற்றிமாறன்.

‘வடசென்னை’ படத்தில் ஆரம்பித்தில் நடிக்க இருந்தது சிம்பு. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போக, தனுஷ் நடித்தார். இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், வடசென்னை படத்தில்
சிம்பு
நடிக்க இருந்தது உண்மை தான். அப்போது சிம்பு காளை படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நாங்கள் ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். அப்படித்தான் வடசென்னை படத்தை பற்றி பேசினோம். சிம்புவும் நடிக்க ஓகே சொன்னார். பிறகு திடீரென்று சிம்பு வெளிநாடு சென்றுவிட்டார்.

சிலுவை போட்டா என்ன தப்பு..?: ‘அரபிக் குத்து’ சர்ச்சைக்கு தளபதி ரசிகர்கள் பதிலடி ..!

அங்கே அவர் மூன்று, நான்கு மாதம் தங்கி விட்டார். படத்தை விரைவாக எடுக்க வேண்டிய காரணத்தால் நாங்கள் தனுஷை வைத்து படம் பண்ண ஆரம்பித்தோம். சிம்புவும் ஒரு கேரக்டர் பண்ண இருந்தது. ஆனால், படத்தில் ஏற்கனவே பல பெரிய நடிகர்கள் இருப்பதால் கதையை மாற்றி எழுதினோம். அதனால் சிம்பு நடிக்க இருந்த கதாபாத்திரம் சின்னதாக வந்தது.

இது சிம்புவிற்கு நன்றாக இருக்காது என்று நினைத்து தான் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒருவேளை இது மட்டும் நடந்து, ஒரே படத்தில் சிம்பு, தனுஷ் நடிச்சிருந்த வேற லெவல் சம்பவமா இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வாழ்க்கைக்கு உகந்த படம் கடைசி விவசாயி; பாராட்டிய மிஷ்கின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.