அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளை யாழ் மாவட்டத்தில் இன்று திறப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு அலுவலகம் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று (18) திறக்கப்படவுள்ளது.

இது அரச வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளையாகும். இதனூடாக பாடசாலை மாணவர்கள், உயர் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் அரச ஊழியர்கள் அடங்கலாக தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் அனைத்து வெளியீடுகளையும் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 

 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.