சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற விர்தி குமாரிக்கு பாராட்டு விழா!

சென்னை,
அபுதாபியில் சமீபத்தில் நடந்த ‘கலப்பு மார்சியல் ஆர்ட்ஸ்’ என்ற சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் இந்திய வீராங்கனை விர்தி குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 

அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். விர்தி குமாரியை வாழ்த்தி பேசிய கனிமொழி கூறியதாவது, “விர்தி குமாரி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று வாழ்த்தினார்.
இந்தியாவிலிருந்து பதக்கம் வெல்லும் முதல் பெண்மணி என்ற சாதனை விர்தி குமாரிக்கு கிடைத்தது. மேலும் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடிய பிற வீரர் வீராங்கனைகளும் சிறப்பிக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.