வெற்றி பெற்ற சில நிமிடங்களில் ஆளும் கட்சிக்கு தாவிய வேட்பாளர்கள்! நகர்புற தேர்தல் ட்விஸ்ட்

நகர்புற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அருண் சுந்தர பிரபு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். வெற்றி பெற்ற சில நிமிடங்களில் அதிமுகவைச் சேர்ந்த அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்து மேலூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
image
அதேபோல, ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேஷ் திமுக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். வெற்றிபெற்ற உடனே அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
image
இதேபோல, கிருஷ்ணகிரி நகராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 -வார்டுகளில் 23-வார்டுகளில் வெற்றிபெற்று திமுக நகராட்சியை கைபற்றியது குறிப்பிடத்தக்கத்து.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.