21 இந்திய மீனவர்கள் விடுவிப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நம் அண்டை நாடான இலங்கையின் சர்வதேச கடல் பகுதியில் பருத்தி துறை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜன. 31ல் கைது செய்தனர்.அவர்களின் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பிப். 21 வரை அவர்களை சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் பருத்தி துறை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.’இதையடுத்து 21 மீனவர்களும் இந்திய துாதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

அவர்களுக்கான கொரோனா பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின் இந்தியா அனுப்பி வைக்கப்படுவர்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 இந்திய மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் விடுவித்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.