ஒரு ஓட்டு கூட பெறாத ச.ம.க., வேட்பாளர்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 25 வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் சதீஷ்குமார் போட்டியிட்டார். அந்த வார்டில் இவருக்கு ஓட்டு இல்லை.

தேர்தலில் சதீஷ்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.மேலும் 3 வது வார்டில் அ.ம.மு.க. மாயகிருஷ்ணன், 11 வது வார்டில் பா.ஜ., செந்தில்குமார் ஆகியோர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர். அ.ம.மு.க.,வில் 5 வேட்பாளர்கள், பா.ஜ. 3, சுயேச்சை 3, அ.தி.மு.க. 1, நாம் தமிழர் கட்சி 1 ஆகிய வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்றனர். மேலும் அ.தி.மு.க.,வில் 13 வேட்பாளர்கள், சுயேச்சை 24, அ.ம.மு.க. 3, பா.ம.க. 1, கம்யூனிஸ்ட் 1, பா.ஜ 2, நாம் தமிழர் 1 வார்டில் இரட்டை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்றனர்.விருத்தாசலம்விருத்தாசலம் நகராட்சியில் 17 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட அருண்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. அவர் அதே வார்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.