சீனா எல்லைப் பிரச்சினையில் இந்திய வீரர்களின் துணிவை குறைத்து மதிப்பிட வேண்டாம்.. எதிர்க்கட்சியினருக்கு ராஜ்நாத்சிங் கண்டனம் <!– சீனா எல்லைப் பிரச்சினையில் இந்திய வீரர்களின் துணிவை குறைத… –>

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் மக்களைக் குழப்பி திசைதிருப்பி வருவதாக எதிர்க்கட்சியினருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்திய வீரர்களின் உறுதியையும் துணிவையும் யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசியல் பண்ண வேண்டாம் என்று அவர் எதிர்க்கட்சியினருக்கு வலியுறுத்தினார்.

ராகுல்காந்தி வரலாற்றை சரியாகப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்ட ராஜ்நாத்சிங் கல்வான் பள்ளத்தாக்கு ஊரி போன்ற இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் வலி மிகுந்தவை என்றார். ஆனால் இந்தியா பலவீனமான நிலையில் இல்லை என்பது உலகிற்கு உணர்த்தியிருப்பதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.