20 நிமிடங்களில் முடிந்த புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பீபின் ராவத், பாடகி லதா மங்கேஸ்வர், முன்னாள் எம்.எல்.ஏ., பரசுராமன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி., திருத்த முன்வரைவுக்கு அனுமதி அளிக்க கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை கால வரையறை இன்றி ஒத்திவைத்தப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் மக்கள் பிரச்னையை பேச ஒரு வார காலம் சட்டசபையை நடத்தாததை கண்டித்து புதுச்சேரி சட்டசபை கூட்டத்தை தி.மு.க., மற்றும் காங்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.