புரோ கபடி : அரையிறுதி போட்டியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் , பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் இன்று மோதல்

பெங்களூரு,
12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் , பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

 இந்த நிலையில், இன்று  நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதையடுத்து நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. 
இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.