கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி இன்றைக்கான தேவை – பிரதமர் மோடி <!– கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி இன்றைக்கான தேவை – … –>

கிராமங்களுக்கான டிஜிட்டல் இணைப்பு வசதி என்பது இலக்கு அல்ல அது இன்றைக்கான தேவை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, திறமையான இளைஞர்களை உருவாக்குவதே அரசின் லட்சியம் என தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறையில் மத்திய பட்ஜெட் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்றார். அதில் பேசிய அவர், ஊரகப்பகுதிகளில் இணையதள வசதி வழங்கப்படுவதன் மூலம் அங்குள்ள இளைஞர்களின் திறன் அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், கிராமப்பகுதி நிலங்களை நவீன தொழில்நுட்பத்துடன் அளவிட்டு அதற்கான ஆவணங்களையும், சொத்து அட்டையையும் வழங்கும் ஸ்வமித்வா திட்டம் மூலம் 40 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.