இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி.. தலை நசுங்கி பெண் பரிதாப பலி..!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலைநசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் , சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவர் தனது மனைவி இசக்கியம்மாள் மற்றும் மகள் சோபிகாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்றார். அப்போது தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே வரும் போது பின்னால் வந்த கனரக லாரி ஒன்று அவர்களது இரு சக்கர வாகன்ம் மீது மோதியது.

இந்த விபத்தில் இசக்கியம்மாளின் தலை மீது லாரியின் முன்பக்க டயர் ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும், இசக்கி மற்றும் சோபிகா ஆகியோர் சாலையோரம் தூக்கி வீசப்பட்டனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இசக்கியம்மாளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்தனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.