அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு <!– அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில் … –>

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திண்டுக்கல்லை சேர்ந்த வைரமுத்து என்பவர் தனது நண்பருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூருக்கு சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில், பழனி புறநகர் சாலையில் சென்றபோது, தங்களுக்கு முன் சென்ற கார் ஒன்றை அவர்கள் முந்த முயன்றனர்.

அந்த சமயத்தில் வலதுபுறத்தில் அந்த கார் வளைந்ததை எதிர்பாராத வைரமுத்து, தனது இருசக்கர வாகனத்தை அதன் மீது வேகமாக மோதினார். இன்டிகேட்டரை பயன்படுத்தி கார் வளைந்த நிலையில், அதனை கவனிக்காமல் அதன் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்ட வைரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இருசக்கர வாகனத்தில் உடன் வந்த அவரது நண்பர் காயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.