நேரலைக்கு முன் ஆஸ்கர் விருதுகளை வழங்க முடிவு| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் : இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், மார்ச் 27ல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதன் நேரலை பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, ஆஸ்கர் அமைப்பு எடுத்துள்ள முடிவுக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.

அதன்படி, நேரலை துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, விருது வழங்கும் விழாவை துவங்கவும், அதில், ஆவணப்படம், உள்ளிட்ட எட்டு பிரிவுகளுக்கு, விருதுகள் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதான விருதுகளை மட்டுமே நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதால், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.