மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

புதுடெல்லி:
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016-ல்  போடப்பட்டது. 
இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏற்கனவே 32 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், மேலும் 3 விமானங்கள் இந்தியா வந்தடைந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 
இதுவரை மொத்தம் 35 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு விமானம் விரைவில் இந்தியா வந்தடையும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.