புரோ கபடி லீக் – பாட்னா, டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின

பெங்களூர்:
12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
எலிமினேட்டர் சுற்றுகள் முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்சும், உ.பி. யோதா அணியும் மோதின. இதில் பாட்னா அணி 38 – 27 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில் தபாங் டெல்லி அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. இதில் அதிரடியாக ஆடிய டெல்லி அணி 40 -35 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது. 
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.