ஒமைக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

ஒமைக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
image
உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் நேரடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஷ் சிங் கேட்டுக் கொண்டார்.
image
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “முதல் அலையில் பாதிக்கப்பட்டபோது நான்கு நாட்களில் நான் குணமடைந்து விட்டேன். ஆனால், மூன்றாம் அலை சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்றாக இருக்கிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டால் குணமடைய 25 நாட்கள் வரை ஆகிறது. இது எனது சொந்த அனுபவம்” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.