வெள்ளவத்தை கடற்பகுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை (Video)



கொழும்பிலுள்ள வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்பகுதியில் ராட்சத முதலையொன்று சஞ்சரித்துள்ளமை புதிய பாதுகாப்பு கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மக்கள் மாலை வேளைகளில் பொழுதுபோக்கும் இடங்களை அண்மித்த கடற்கரை பகுதியில் இந்த முதலையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில் கரையோரப் பகுதியில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும், பொழுதுபோக்குக்காக கடற்கரைக்கு செல்லும் மக்களும் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பின் கால்வாய்களில் இருந்து இந்த முதலைகள் கடலுக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.