மக்கள் அமைதி காக்க வேண்டும் – உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

கியூ:
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. 
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷ்யா தனது படைகளை அப்பகுதியில் நிலைநிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.  
ரஷ்யா படையெடுப்பின் அச்சுறுத்தலால் உக்ரைனில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்வதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், தனது நாடு ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற கூற்றை நிராகரித்தார். ரஷ்ய படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிடும்.
உக்ரைன் மக்களும் உக்ரைன் அரசாங்கமும் அமைதியை விரும்புகின்றனர். ஆனால் தேசம் தாக்குதலுக்கு உள்ளானால் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.