நடிகையை கட்டிப்பிடித்து பலாத்கார முயற்சி: ரியல் எஸ்டேட் முகவர் மீது வழக்கு

மும்பை: பாலிவுட் மாடலும், நடிகையுமான இஷிகா போரா, மும்பையின் ஓஷிவாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், ஓஷிவாரா காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘ரியல் எஸ்டேட் முகவர் மணீஷ் குப்தா என்பவர் எனது அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார். இவர் குடியிருப்பின் தண்ணீர் குழாயை திறந்து விட்டார். இதனால் எனது வீட்டின் கட்டிடத்தில் கசிவு ஏற்பட்டது. மேலும், வீட்டின் உடமைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. இதற்கு இழப்பீடு தர மணீஷ் குப்தா ஒப்புக் கொண்டார். ஆனால், பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை. இழப்பீடு பணத்தை திருப்பிக் கேட்டபோது, என்னிடம் அநாகரீகமாக நடத்து கொண்டார். அடுத்த நாள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னை கட்டிப்பிடித்தார். பலாத்காரம் செய்ய முயன்றார். தடுத்து நிறுத்த முயன்றபோது என்னை தாக்கினார். நான் கூச்சல் போட்டதால் அங்கிருந்து தப்பிச் சென்றார். எனவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ஓஷிவாரா போலீசார், ரியல் எஸ்டேட் முகவர் மணீஷ் குப்தாவுக்கு எதிராக ஐபிசியின் 354, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.