ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் ராணுவம் தகவல்!

உக்ரைன்
ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் நுழைய தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் எண்ணெய் கிணறுகள், ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மீது ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. உக்ரைனில் உள்ள விமான தளங்கள், ராணுவ சொத்துக்கள் மீதே குறிவைத்துள்ளோம்; அதிக மக்கள் உள்ள பகுதிகள் எங்கள் இலக்கு அல்ல என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்ய தாக்குதலால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்த ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடங்கியது போர்: உக்ரைனில் ரஷ்ய படைகள் குண்டு மழை!

முன்னதாக, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புடினின் ராணுவ நடவடிக்கையை உலகம் தடுக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ராஷ்யாவே காரணம் எனவும், இதற்கான விளைவுகளை
ரஷ்யா
சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.