யாழில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் கைது



யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த
மூதாட்டி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்
ஒருவர் இன்று காலை, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது.

இந்த நிலையில்
, மூதாட்டியின் படுகொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த நபரொருவர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

73 வயதுடைய காணிக்கையம்மா ஜெயசீலி என்ற மூதாட்டியே பூச்சாடியால் அடித்து கொலை
செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே , குறித்த சந்தேகநபர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.