ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம்: துரிதமாக செயல்பட்ட செவிலியரால் மகிழ்ச்சியடைந்த தம்பதியினர்

திருப்பத்தூரில் கூலித் தொழிலாளியின் மனைவியை பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னசாமி, விஜயசாந்தி தம்பதியினர். இவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தங்கி ஒப்பந்த முறையில் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தனர்.
image
இந்நிலையில்,, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விஜயசாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் ,சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜயசாந்தி பிரசவ வலியால் துடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் செவிலியர் போதும் பிள்ளை விரைவாக செயல்பட்டு மருத்துவ உதவிகளை செய்து விஜயசாந்தி; பிரசவிக்க உதவினார். இதில் சுகப்பிரசவமாக இரு ஆண் குழந்தைகள் பிறந்தது. பின்னர், தாயும், சேயும் சிவகங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்.
image
 ஆம்புலன்ஸ் வாகனத்தை பாதுகாப்பாக இயக்கிய ஓட்டுனர் மலையரசனையும், உரிய நேரத்தில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் செவிலியர் போதும் பிள்ளையையும் மருத்துவர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.