தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ; இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு <!– தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ; இடிபாடுகளில் சிக்க… –>

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினார்.

கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், வழக்கம்போல் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர்.

அப்போது, பட்டாசுகளுக்கு மருந்து கலவை நிரப்பும் இடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் ஒரு கட்டிடம் முழுவதுமாக வெடித்து சிதறி தரைமட்டமானது.

அதில், அந்த கட்டிடத்திற்குள் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் உடல் கருகி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடிமருந்து கலவை செய்யும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.