திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக காரைக்குடி – சென்னைக்கு நேரடி ரயில்!

காரைக்குடியில் இருந்து திருத்ததைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு நேரடி ரயில் இயக்கப்படவுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டியளித்துள்ளார்.
காரைக்குடியில் தொடங்கி திருவாரூர் வரை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ரயில் பாதை, ரயில் நிலையங்கள் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஊழியர்களிடம் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்தது திருத்துறைப்பூண்டி ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ரயில்வே பாதையில் உள்ள 70 ரயில்வே வாயில்களுக்கு பகல் நேரத்தில் பணியாற்றும் வகையில் கேட்-கீப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர கேட்-கீப்பர்களாக முன்னாள் ராணுவத்தினரை பணியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
image
மயிலாடுதுறையில் சோழன் ரயிலை இணைக்கும் வகையில், காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை ஒரு ரயிலும், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துரைப்பூண்டி வழியாக காரைக்குடி வரை செல்லும் பயணிகள் ரயில் மதுரை வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இரவுநேர கேட் கீப்பர்கள் நியமனத்திற்கு பிறகு காரைக்குடியில் இருந்து சென்னைக்கும், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளது. தற்போது நடைபெற்றும் வரும் திருத்துறைப்பூண்டி – வேளாங்கன்னி ரயில் பாதை அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
சமீபத்திய செய்தி: “திட்டம் தயார் அனைவரும் பாதுகாப்பாக திரும்புவார்கள்” – இந்திய தூதர் உறுதிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.