இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது

புதுடெல்லி:
இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இந்தப் பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகுரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உக்ரைனில் போர் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என இந்திய விமானப்படை இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.