மீண்டும் உக்ரைன் செல்லும் மாணவர்களின் செலவையும் அரசு ஏற்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை:
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உக்ரைன் போர் சூழலை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் இந்திய மாணவர்கள் பட்ட சிரமம் வருத்தத்திற்குரியது. இப்பொழுதேனும் மீட்பு நடவடிக்கையில் அவர்களின் பயணச் செலவை மத்திய, மாநில (தமிழக) அரசுகள் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
இந்தியா திரும்பும் செலவை இரு அரசுகளும் ஏற்கும் என்றாலும், உக்ரைனில் மறுபடியும் தங்கிப்படிக்கும் சூழல் உருவானபின் அங்கு திரும்பிச் செல்லும் செலவை யார் செய்வது என்பதே நடுத்தர மாணவர்களின் கேள்வி. ஆக இவ்விரு அரசுகளும் இந்தச் செலவையும் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.