ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அமெரிக்கா தடை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புடின்
உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த மூன்று நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய ராணுவத்திற்கு முடிந்தவரை எதிர் தாக்குதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள படையெடுப்பு, சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யாவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

யாரு இவரா காமெடியன்?.. சூப்பர் “ஹீரோ”வாக மாறிய உக்ரைன் அதிபர்!

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் மீது,
பொருளாதார தடை
விதித்து அமெரிக்கா உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்குள் நுழைய அவர்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பேட்டி அளித்த, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தவில்லை என்றால் வரும் காலங்களில் மேலும் பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.