” ஆயுதங்களை கீழே போட மாட்டோம் ” – உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைன் எங்கள் நாடு; ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என அந்நாட்டு அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படைகள் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மெலிடேபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை அழிப்பதற்கு, கடல், வான்வெளி வழியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தலைநகரை பாதுகாப்பதற்கு, ஆண்களும், பெண்களும் ஆயுதங்களுடன் உலா வருகின்றனர். ரஷ்ய படைகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் கீவ் நகரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளதாவது:
உக்ரைன் எங்களது நாடு. அதனை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆயுதங்களை கீழே போட போவதில்லை. உக்ரைன் ராணுவத்தினர் சரணடைய சொல்லிவிட்டதாக வதந்தி பரவுகிறது. ரஷ்யாவின் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பிரான்ஸ் அதிபருடன் பேசியுள்ளேன். ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் நமது நட்பு நாடுகளிடம் இருந்து உக்ரைனுக்கு வந்து கொண்டிருக்கிறது. போருக்கு எதிரான கூட்டணி துடிப்புடன் உள்ளது. இவ்வாறு அந்த வீடியோவில் அதிபர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.