பெரியார் வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கிலிட வேண்டும் என முகநூலில் கருத்து பதிவிட்ட நபர் கைது <!– பெரியார் வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கிலிட வேண்டும் என … –>

தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கிலிட வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு, கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து பேசிய குழந்தைகளை அவதிக்கும் வகையில், முகநூலில் கருத்து பதிவிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் அளித்த புகாரின் பேரில் வெங்கடேஷ்குமார் பாபுவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.