உக்ரைனில் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் செல்வது ஏன்?

புதுடில்லி : உக்ரைனில் தமிழகம் உட்பட இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோனார் ஹரியானா, பஞ்சாபை சேர்ந்தவர்கள்.

உக்ரைனில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., படிப்பு, இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார கவுன்சில், ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் படிப்புக்கான செலவும் குறைவு. இதனால் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு செல்கின்றனர்.

இதுகுறித்து பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த டாக்டர் அஷ்வனி குமார் கூறுகையில், ”இந்தியாவில் தனியார் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 10 – 12 லட்ச ரூபாய் செலவாகும். நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 50 லட்ச ரூபாய் செலவாகும். உக்ரைனில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 4 – 5 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும். இது பஞ்சாப் தனியார் கல்லுாரிகளில் ஆகும் செலவை விட மூன்று மடங்கு குறைவு,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.