போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கும்படி ரஷ்யர்களுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை <!– போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கும்படி ரஷ்யர்களுக்கு உக்ரைன்… –>

கீவைக் கைப்பற்றும் ரஷ்யாவின் வேகத்தை உக்ரைன் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் வாலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கும்படி ரஷ்ய மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் திட்டத்தை உக்ரைன் படையினர் தடம்புரளச் செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ரஷ்யர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய வங்கிகளிடையே நிதிப் பரிமாற்றத் தகவல் தொடர்பு அமைப்பான ஸ்விப்டில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற ஆதரவளிக்கும்படி ஜெர்மனி, ஹங்கேரி நாடுகளை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.