ருமேனியா டூ மும்பை… உக்ரைனில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய இந்தியர்கள்!

சோவித் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷியா அதிரடியாக போர் தொடுத்துள்ளது. தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நடத்திவரும் தொடர் மும்முனை தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தினருடன் சேர்ந்து பொதுமக்களும் மடிந்து வருகின்றனர். ரஷிய ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையே போரின் காரணமாக பணி நிமித்தமாகவும், உயர் கல்விக்காகவும் உக்ரைனில் தங்கியிருக்கும் 5,000 தமிழர்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் எழுந்திருந்தது.

ரஷியா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக தமது நாட்டுடனான சர்வதேச பயணிகள் விமான சேவையை உக்ரைன் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கு ஃபோன் போட்ட உக்ரைன் அதிபர்… மோடியின் ஸ்ட்ராங் அட்வைஸ் இதுதான்!

இதனையடுத்து, உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதலிகளை வழங்கவும், அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

உக்ரைனின் எல்லை நாடுகளான ஹங்கேரி, போலந்து, ருமேரியா, ஸ்லோவாக் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உள்ள அதிகாரிகள் குழுக்கள் மூலம் மூலம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

முதற்கட்டமாக சுமார் 500 இந்திய மாணவர்கள், மருத்துவர்கள் உக்ரைனின் செர்னிவிஸ்டி நகரில் இருந்து
ருமேனியா
எல்லைக்கு பஸ்சில் புறப்பட்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக சோதனை முகாம்களில் இருந்த அதிகாரிகள் இந்திய மாணவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று புகாரெஸ்ட் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் இந்தியர்கள் ஏற்றப்பட்டனர்.

முதல் மீட்பு விமானத்தில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 219 பேர் ருமேனியாவில் இருந்து இந்தியாவுக்கு பயணித்தனர். ருமேனியாவில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்ட அந்த விமானம் இரவு 8 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. உக்ரைனில் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ருமேனியா எல்லை 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தரைவழியாக அங்கு செல்ல 11 மணி நேரமாகும். பின்னர் அந்த எல்லையில் இருந்து தலைநகர் புகாரெஸ்டுக்கு செல்ல 9 மணிநேரமாகும் இதேபோன்று வ்விலிருந்து ஹங்கேரி எல்லையை அடைய 13 மணி நேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.