நேரு வீதி வணிகத் திருவிழா பரிசளிப்பு துவக்கம்| Dinamalar

புதுச்சேரி : நேரு வீதி வணிகத் திருவிழாவிற்கான நிச்சயப் பரிசு வழங்கும் பணியை சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி நேரு வீதி வணிகத் திருவிழா கடந்த ஜன.,1 முதல் பிப்.,15 ம் தேதி வரை நடந்தது. விழாவில் பங்கேற்ற வாடிக்கையாளர்களுக்கு நிச்சயப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.வள்ளலார் சாலை வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் இசைக்கலைவன், நடராஜன், குகன், கணேசன் முன்னிலை வகித்தனர்.சிவசங்கர் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பரிசளிப்பு விழாவை துவக்கி வைத்தார். செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.நேரு வீதி வியாபாரிகள் சங்கத் தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் நேரு வீதி வணிகத் திருவிழா, மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பரிசு டோக்கன்களுக்கான நிச்சய பரிசுகள் (வீட்டு உபயோக பொருட்கள்) நாளை 28ம் தேதி வரை வழங்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளை விட இந்தாண்டு வணிகத் திருவிழாவில் அதிக வாடிக்கையாளர்கள், பங்கேற்று உள்ளனர். பரிசுகளை தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்’ என்றார்ஏற்பாடுகளை பொருளாளர் பழனி அடைக்கலம், ராதாக்கிருஷ்ணன், வெங்கடேஷ், செல்வகணபதி மற்றும் நேரு வீதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.