தென்கொரியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா

சியோல்:
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அந்த வகையில் அங்கு கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1½ லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 28 லட்சத்து 31 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று அதிகரித்து வரும் அதே வேளையில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் அங்கு 112 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.