பழனியில் தினசரி குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தந்தையை கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்.! <!– பழனியில் தினசரி குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தந்தையை க… –>

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தினசரி குடித்துவிட்டு வந்து தாயிடமும் தங்கையிடமும் ரகளை செய்து வந்த தந்தையை 11ஆம் வகுப்புப் படிக்கும் மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஓமந்தூரான் என்ற நபர், கேரளாவில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்தார். தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியையும் மகளையும் அடித்துத் துன்புறுத்துவது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது.

11ஆம் வகுப்புப் படித்து வரும் இவரது மகன், தந்தையின் செயலை அவ்வப்போது கண்டித்து வந்துள்ளான்.

சனிக்கிழமை நள்ளிரவில் வழக்கம்போல் ஓமந்தூரான் குடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபடவே, பொறுமையை இழந்த அவரது மகன், வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து, அவரது தலையில் தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளான்.

இதில் ரத்தவெள்ளத்தில் ஓமந்தூரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.