கள்ளகாதலுடன் கணவனை கொன்ற மனைவி கைது… கள்ளகாதலனுக்கு காவல்துறை வலைவீச்சு..!

கள்ளகாதலுக்காக கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). இவருக்கு தஞ்சை மாவட்டம் நெய்வாசல் பகுதியை சேர்ந்த அனிதா  என்பவருடன் திருமணம்  நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியை காணவந்த அவரை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவரின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் பதிலளிக்கவே சந்தேகமடைந்த காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அனிதா அளித்த வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இளையராஜாவின் சித்தப்பா மகன் ஜெயபால் என்பவருக்கும் எனக்கும் கள்ளதொடர்பு இருந்தது. இந்நிலையில்,  அனிதாவின் வீட்டிற்கு வந்த இளையராஜாவை ஜெயபாலுடன் சேர்ந்து அம்மிக்கலால் தாக்கி கொலை செய்ததாக தெரிவித்தார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் ஜெயபாலை  தேடி வருகின்றனர். கள்ளகாதல் விவகாரத்தால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.