நான் பெரிய ரௌடி என்பது கேரளா முழுமைக்கும் தெரியவேண்டும் ; கொலை வழக்கில் கைதான நபர் வாக்குமூலம் <!– நான் பெரிய ரௌடி என்பது கேரளா முழுமைக்கும் தெரியவேண்டும் ;… –>

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் விடுதி ஊழியர் பட்டப்பகலில் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நபர், தாம் ஒரு பெரிய ரௌடி என்பதை கேரளா முழுமைக்கும் தெரிவிக்கவே கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

தம்பானூரிலுள்ள சிட்டி டவர் என்ற தங்கும் விடுதியில் பணியாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை இரு தினங்களுக்கு முன் மர்ம நபர் கொடூரமாக வெட்டிக் கொன்றான். சிசிடிவி காட்சிகளை வைத்து அஜீஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் 2 மாதங்களுக்கு முன் அந்த விடுதியில் மனைவியுடன் தங்கியிருந்த அஜீஷுக்கும் ஐயப்பனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்குப் பழி தீர்க்கும் வகையிலும் தாம் கேரளாவில் ஒரு பெரிய ரௌடி என்பதை தெரிவிக்கும் வகையிலும் கொலையை அரங்கேற்றியதாக அஜீஷ் போலீசில் தெரிவித்துள்ளான்.

கொலையை போதையில் செய்யவில்லை என்றும் முறையாகத் திட்டமிட்டு, பலர் பார்த்து அஞ்ச வேண்டும் என்பதற்காகவே பட்டப்பகலில் செய்ததாகவும் போலீசில் அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.