@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வெளிநாட்டினரின் வசதிக்காக இலவச ரயில்களை உக்ரைன் அரசு இயக்கி வருகிறது அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு வந்து சேரும் இந்தியர்கள் அந்தந்த நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் வசதிக்காக @opganga என்ற பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. ஒன்றை துவங்கியுள்ள மத்திய அரசு தங்களின் இருப்பிடம் மற்றும் தேவையான உதவிகள் குறித்து @opganga என்ற இந்த ட்விட்டர் ஐ.டி. யிலும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.