பாதயாத்திரை சென்றால் சிவகுமார் முதல்வரா? சிவகுமாருக்கு மத்திய அமைச்சர் கேள்வி| Dinamalar

பெங்களூரு : ”பாதயாத்திரை நடத்துவதால் முதல்வராகி விடுவோம் என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் நினைக்கிறார்,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:காங்கிரசாருக்கு தர்ணா, பாதயாத்திரை, சத்யா கிரகம் நடத்தும் சக்தியை, கடவுள் அளிக்கட்டும்.

வரும் நாட்களிலும், எதிர்க்கட்சி இடத்தில் அமரட்டும். மேகதாது மட்டுமின்றி, மகதாயி திட்டத்துக்காகவும், போராட்டம் நடத்த காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். பாத யாத்திரை நடத்தி, சித்தராமையா முதல்வரானார். அதே போன்று நடத்தினால், தானும் முதல்வராவோம் என்பது, சிவகுமாரின் எண்ணம். இவர் முதல்வராகமாட்டார். வேண்டுமானால் எதிர்க்கட்சி தலைவராகலாம்.ம.ஜ.த., ஒரு அரசியல் கட்சியே அல்ல என, காங்கிரசார் விமர்சித்துள்ளனர். காங்கிரசுடன் கூட்டணி வைத்து, அரசு அமைத்தால் ஒரிஜினல் கட்சி. எங்களுடன் சேர்ந்து, அரசு அமைத்தால் டூப்ளிகேட் கட்சியா?இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.