இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது – பிரதமர் <!– இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகி… –>

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பஸ்தி பகுதியில் நடைபெற்ற பாஜகவின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கித் தவித்த ஏராளமான இந்தியர்கள் மீட்கப்படுவதாக கூறினார்.

மேலும், இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், தற்போது நிலவும் இடையூறுகளையும், சிக்கல்களையும் கடந்து அவர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.