ரஷியாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழப்பு – உக்ரைன் அரசு தகவல்

கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 
ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றி, நாட்டை பாதுகாக்க வீரர்கள் உத்வேகத்துடன் போராடும்படி கேட்டுக்கொண்டு வருகிறார். 
இந்நிலையில், ரஷியாவுடனான போரில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உள்பட 1184 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.