ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை.. <!– ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் அட… –>

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில் மறுநாளான சனிக்கிழமை அதே பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்த மற்றொரு மாணவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகப் பள்ளி செல்லாமல் இருந்த அவரிடம் அதற்கான காரணம் குறித்து பெற்றோர் கேட்டபோது, தனது அறைக்குச் சென்று அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.