குஜராத்தி சினிமாவில் தடம் பதிக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்: வெளியான அறிவிப்பு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து குஜராத்தி மொழியில் படமொன்றை தயாரிக்க உள்ளனர். இவர்களின் `ரௌடி பிக்சர்ஸ்’ சார்பில் தமிழில் மட்டுமே படங்கள் தயாராகி வந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக குஜராத்தி திரையுலகிலும் தடம்பதிக்க தயாராகிவிட்டது இந்த ஜோடி!

இவர்கள் இருவரின் இணை தயாரிப்பில் `காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸூக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பதுடன் விக்னேஷ் சிவம் இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தங்களின் `ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் குஜராத்தி திரைப்படமொன்றை தயாரிக்க உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் .

image

தனது பதிவில், “குஜராத்தி சினிமாவில் எங்களது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளோம். இதுகுறித்து அறிவிப்பதில், எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் குஜராத்தி சூப்பர்ஸ்டார் மல்ஹர் தாக்கர் நடிக்கிறார். அவருடன் மோனல் காஜர் நடிக்கிறார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மனிஷ் இயக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இத்திரைப்படத்துக்கு `ஷூப் யார்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பணியாற்றுவோரில் நடிகை மோனல் காஜர் `வானவராயன் வல்லவராயன்’ `சிகரம் தொடு’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். குஜராத்தி சினிமாவில் மேலும் பல படங்களில் பணியாற்றவும் தாங்கள் ஆர்வமாக இருப்பதாக விக்னேஷ் சிவன் `ரவுடி பிக்சர்ஸ்’ சார்பாக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்தி: ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன்: யார் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.