வேளாண் அமைச்சர் ஆய்வுக் கூட்டம்| Dinamalar

புதுச்சேரி : மத்திய அரசின் செயல் திட்டமான, பிரதமர் குறுந்தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்ததுதல் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம், சட்டசபை வளாகத்தில் உள்ள வேளாண் அமைச்சர் அலுவலத்தில் நடந்தது.வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

இதில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் இன்குபேஷன் சென்டர் அமைப்பதற்காக ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் 7000 சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பால் மதிப்புக்கூட்டும் பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் வேளாண் துறை செயலாளர் ரவிபிரகாஷ், டீன் மாயவேல், டாக்டர்கள் பால், குமரவேல் மற்றும் பால் வள அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.