உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி

உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது.

போரில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு கர்நாடகா முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த மாணவர் நவீனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்..
உக்ரைன் கார்கீவ் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய மாணவர் உயிரிழப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.