உக்ரைனில் கர்நாடக மாணவன் இறக்க இதுதான் காரணம்- முன்னாள் முதல்வர் பகீர் குற்றச்சாட்டு!

உக்ரைனில் நடந்த ரஷிய தாக்குதலில், அங்கு மருத்துவ படிப்பு படித்துவந்த கர்நாடகத்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இக்கொடூர சம்பவத்துக்கு நீட் தேர்வுதான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அடுக்கடுக்கான ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ‘நவீன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக மதிப்பெண் பெறுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

ஆனாலும் நீட் தேர்வு காரணமாக இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. இந்தியாவில் மருத்துவ சீட் மறுக்கப்பட்டதால், நவீன் தனது கனவை நனவாக்கி மருத்துவராக ஆவதற்கு உக்ரைன் சென்றார். இப்போது அந்த இளைஞனின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

நீட் தேர்வுக்கு பிறகு ஏழை, எளிய நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவாகிவிட்டது. டுடோரியல்கள் காளான்கள் போல் முளைத்து மாணவர்களிடம் லட்சக்கணக்கில் ரூபாயை பறித்து வருகின்றன. நீட் தேர்ச்சி பெற்ற 99% மாணவர்கள் இந்தப் பயிற்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, டுடோரியல்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்தி, நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களில் நடனமாடி வருகின்றன.பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக இனியாவது அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்’ என்று குமாரசாமி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.