மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பியது இந்தியா.. <!– மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிவாரணப்பொருட்களை அனு… –>

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், 100 கூடாரங்கள் மற்றும் 2,500 போர்வைகளை அனுப்பி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், கஸியாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சி-17 ரக போர் விமானம் மூலம் நிவாரண பொருட்கள் உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவுக்கு எடுத்து செல்லப்பட்டன.

உக்ரைனில் இருந்து தப்பித்து ருமேனியாவில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்கள் அந்த விமானம் மூலம் தாயகம் திரும்ப உள்ளனர். இந்தியர்களை மீட்பதற்காக மேலும் 2 போர் விமானங்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.