ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி; ஒடிசா அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – ஒடிசா  அணிகள் மோதின.
ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியல் சீமா  போட்டியின் 23 மற்றும் 26-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். அவரை தொடர்ந்து ரீட்விக் தாஸ், முர்ரே  மற்றும் இஷான் தலா ஒரு கோல் அடிக்க ஜாம்ஷெட்பூர் 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.