பஞ்சாப்: சக வீரர்களை துப்பாக்கியால் சுட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்… 5 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை ஒட்டிய பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் குழுவில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் சட்டப்பா எஸ்.கே. என்பவரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை மற்ற வீரர்களால் தற்காப்புக்காக கொல்லப்பட்டாரா ? என்பது குறித்துத் சரியான தகவல்கள் இல்லை.

துப்பாக்கிச் சூடு

இந்தச் சம்பவம் காலை 9:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சட்டப்பா எதற்காக மற்ற வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் எனத் தெரியவில்லை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கோர சம்பவம் காசா பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் நடந்துள்ளது. இந்தப் பகுதி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் இருந்து சுமார் 12-13 கிமீ தொலைவில் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.