காயமடைந்த மாணவர் இன்று நாடு திரும்புகிறார்| Dinamalar

புதுடில்லி-“உக்ரைன் போர்க்களத்தில் காயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் இன்று நாடு திரும்பு கிறார்,” என, மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.

விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வி.கே.சிங் கூறிஇருப்பதாவது:உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் இருந்து வெளியேற முயன்ற போது, ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் காயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங், இன்று நாடு திரும்புகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் மாணவர் ஹர்ஜோத் சிங் கூறியதாவது:நான் கிவ் நகரில் இருந்து வெளியேற பல முறை முயன்றும் முடியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் என் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது; காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கிவ் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.